ஆட்டம் முடிந்தது – ஓட்டம் பிடித்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    
கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலேயில் அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த விமானத்தில் கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி இரண்டு மெய்க்காவலர்கள் பயணம் செய்துள்ளனர்.

அதேவேளை, பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!