ஊடகவியலாளர் புஷ்பிக பேருந்துக்குள் கடத்தல்! July 28, 2022 7:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest றுஹுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ‘அனித்தா ‘பத்திரிகையின் ஆசிரியர் குழு முன்னாள் உறுப்பினர், சுதந்திர ஊடக வியலாளர் அன்டனி வேரங்க புஷ்பிக சிவில் உடையில் வந்த பொலிஸாரால் கடத்தல் பாணியில் கைது செய்யப்பட்டுளளார். கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று சிவில் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், பின்னர் வீடு நோக்கி செல்ல பஸ் வண்டியில் ஏறி இருந்த போது, பஸ்ஸுக்குள் பிரவேசித்துள்ள 6 பேர் அவரை பலாத்காரமாக இழுத்துச் சென்று ஜீப் வண்டியொன்றில் அழைத்து சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்த சட்டத்தரணி நுவன் போப்பகே உள்ளிட்ட குழுவினர் நேரில் கண்டுள்ளதுடன் இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அறிவித்துள்ளனர்.இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தலையீடு செய்த பின்னர், ஊடகவியலாளர் அன்டனி வேரங்கவை கைது செய்ததாக பொலிஸார் மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அறிவித்துள்ளனர்.கொழும்பு தெற்கு குற்ற விசாராணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு , பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை கோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிந்தது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…