தொடர் கைதுகள்! அமைதி போராட்டத்திற்கு தயாராகும் காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் July 29, 2022 7:49 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக்களத்தில் நாளுக்கு நாள் மக்களின் வருகை குறைவடைந்து வருகின்றது. புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கைதுகள் காரணமாக இவ்வாறு மக்களின் தொகை குறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தில் ஆரம்ப நாள் தொடக்கம் செயற்பட்டு வந்த முன்னணி செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் கைது செய்யப்படவுள்ளனர். இந்த நிலையில், குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முன்னணி செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தற்போது காலி முகத்திடலில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பௌத்த தேரர்கள் அதேபோல இஸ்லாமிய மத குருக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன், அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…