உக்ரைனின் அதிரடி தாக்குதல்: பின்வாங்கும் ரஷ்ய படைகள்! July 30, 2022 11:53 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறது. இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் இடையே வெள்ளி கிழமை நடந்த சண்டையில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் மற்றும் ஏழு டாங்கிகள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவத்தின் தெற்கு கட்டளை தெரிவித்துள்ளது.இதுத் தொடர்பாக கெர்சன் பிராந்திய கவுன்சிலின் முதல் துணைத் தலைவர் யூரி சோபோலெவ்ஸ்கி டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்த கருத்தில் இது ஆரம்பம் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே டினிப்ரோ ஆற்றின் வழியாக கெர்சனுக்கான ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது, இதனால் கிழக்கு மற்றும் கிரிமியா ஆகியவற்றில் இருந்து ரஷ்ய படைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என உக்ரைனின் தெற்கு கட்டளை அறிக்கையில் தெரிவித்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…