20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சி தாவல்: வெளியான தகவல் August 1, 2022 3:00 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சி தாவவுள்ளனர் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது எனவும், ஆளுங்கட்சிப் பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளது எனவும் தெரியவருகின்றது.ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் ரணிலுடன் சங்கமிக்கவுள்ளனர்.அதேபோல் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பட்டி, சரத் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…