நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் அக்கறை! August 3, 2022 10:14 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை சர்வதேச சமூகத்திலுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடி விரைவாகத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்புடன் ஜனாதிபதி செயற்படுவதாகவும், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. விரைவில் பொது இணக்கத்துக்கு வருவதற்கு முயற்சிக்கின்றோம் எனவும் கொழும்பில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகாரத்துறை அமைச்சில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான முதலாவது சந்திப்பில், புதிய ஜனாதிபதியின் தெரிவு மற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய அபிவிருத்திகள் குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதற்கும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் இட்டுச் சென்ற இலங்கையின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளை அமைச்சர் தெளிவுப்படுத்தியதுடன், இது தொடர்பான செயன்முறைகள் ஜனநாயக அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் இடம்பெற்றதாகவும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை சர்வதேச சமூகத்திலுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் மிக அதிக முன்னுரிமையுடன் கலந்துரையாடி விரைவாகத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்புடன் ஜனாதிபதி செயற்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.தற்போதைய சமூகப் பொருளாதார சூழலில் பொருத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளுக்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…