உலக நாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது: ரணில் அறிவுறுத்தல் August 4, 2022 9:37 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைக்கான சீனத்தூதுவர் Qi Zhenghongக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.தனது டுவிட்டர் செய்தி ஊடாக ஜனாதிபதி இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.ஒன்றுப்பட்ட சீனா என்ற கொள்கை மாத்திரமின்றி, ஐக்கிய நாடுகளின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு தொடர்பான இணக்கப்பாடுகளின் அடிப்படைகள் தொடர்பில் இலங்கை கடும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என சீனத்தூதுவரிடம் வலியுறுதித்தியதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார்.உலகின் தற்போதைய அனர்த்தங்கள் மேலும் உக்கிரமடைவதை அதிகரிக்கும் ஆத்திரமூட்டும் செயல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.அத்துடன் உலகின் ஏனைய நாடுகளுக்கு இடையிலான கௌரவம்,நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை, அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதல்களை ஏற்படுத்திக்கொள்வதை தவிர்த்தல் போன்றவை முக்கியமானது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…