இந்திய – இலங்கை உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும்! தமிழக கட்சி வலியுறுத்தல்

1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த உடன்படிக்கை, நடைமுறைப்படுத்தப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரவேற்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு

இதேவேளை சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்காத இலங்கை அரசாங்கத்தின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!