சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் ஜனாதிபதிக்கே வெற்றி: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா! August 10, 2022 3:13 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest சர்வஜன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் ஒன்றை நடத்தினால், ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள், சிறப்பான தலைமைத்துவதை நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை எதிர்கொள்ள அச்சமின்றி முன்வந்த யுக புருஷர். அவர் தனது அரசியல் எதிர்காலம் பற்றியோ, வேறு விடயங்கள் குறித்தோ பேசாது சவாலை பொறுப்பேற்றார்.தற்போது நாட்டின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக தீர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடு செல்லும் திசை மிக தெளிவானது எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…