இன்று எரிபொருள் விலையில் மாற்றம்..!

எரிபொருளின் விலையில் இன்றைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார்.

 ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

 அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்த நிலையிலேயே இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த முதலாம் திகதி எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த முதலாம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி டீசலின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.

அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனமும் டீசலின் விலையை பத்து ரூபாவினால் குறைத்திருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!