உண்மைகளைக் கண்டுபிடித்தாலே புதிய ஜனாதிபதியை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள்! August 15, 2022 8:59 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைந்துள்ள உண்மைகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே புதிய ஜனாதிபதியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் புதிய அரசாங்கம் ஈடுபடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே புதிய ஜனாதிபதியை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த தாக்குதலின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உண்மையை கண்டறிவதற்காக தற்போதைய ஜனாதிபதி முயலவேண்டும் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்வதற்கு முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரை தடுத்தவர்களை தண்டிக்கவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…