ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்போகும் ரணில் மற்றும் பசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
நாளை இந்த சந்திப்பு இடம்பெறும் என  தெரியவருகின்றது.

இதன்போது, பொதுஜன பெரமுனவை சேர்ந்த 7 சிரேஷ்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!