நாட்டை வெற்றி கொள்ள செய்யும் போராட்டத்தின் இரண்டாம் அலை! பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை

நாட்டில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாட்டை வெற்றி கொள்ள செய்யும் போராட்டத்தின் இரண்டாம் அலை என்னும் தொனிப்பொருளில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – வொக்ஸ்வொல் வீதியில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி கண்காணிப்பு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிரபல அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போராட்ட மையத்தின் ஊடக இணைப்பாளர் குறித்த அரசியல்வாதிக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய அமைப்பு உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாகோகம போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சிலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பொலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!