கனடாவில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் தமிழ் தெருவிழா!

கனடாவின் தமிழ் தெருவிழா மீண்டும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் தெருவிழா கோலாகலமாக இடம்பெறவுள்ளது. இதன்படி கனடாவின் ஸ்காப்ரோவின் மார்க்கம் வீதியில் இந்த தெருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு இந்த மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
    
தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். தென் ஆசியாவிற்கு வெளியே நடைபெறும் மாபெரும் தமிழ் நிகழ்வாக இந்த தமிழ்தெருவிழா கருதப்படுகின்றது.
அதேவேளை கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்தெரு நிகழ்வில் பெருமளவிலான தமிழ் மக்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் உள்ளுரில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட உணவுக்கடைகள் மற்றும் ரெஸ்டுரன்ட்கள் உணவு விற்பனை செய்ய உள்ளன. இந்திய மற்றும் இலங்கையின் புகழ்பூத்த இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் மொத்தமாக 300 கலைஞர்கள் இந்த இரு நாட்கள் நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கூறப்படுகின்றது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!