கனடாவில் தனியாக இருந்த 15 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை! September 19, 2022 11:13 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடாவில் 15 வயது சிறுமியிடம் நடந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாலிபக்ஸில் தான் இந்த இரு தினங்களுக்கு முன்னர் காலை 11.30 மணியளவில் அச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் சென்று கொண்டிருந்த 15 வயது டீன் ஏஜ் பெண்ணை 40களில் உள்ள நபர் ஒருவர் அணுகினார். பின்னர் அப்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார், இதை தொடர்ந்து டீன் ஏஜ் பெண் அங்கிருந்து கிளம்பி வேகமாக சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.சந்தேக நபர் தனது 40 வயதுடைய வெள்ளையராக விவரிக்கப்படுகிறார், தோராயமாக 5’8″ உயரம் கொண்டவர் எனவும் அவர் கருப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு டிராக் பேண்ட் அணிந்திருந்தார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவர் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொண்டு கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…