ஜனாதிபதி மாளிகை உட்பட முக்கிய இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் September 23, 2022 9:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம் விசேட அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.இது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளார்.இலங்கையின் யுத்தம் நடைபற்ற காலத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நாட்டின் பல இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. அது பொதுவான அனுபவமாக இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டன.இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தியுள்ளார். இலங்கையில் அண்மையில் நடந்த போராட்டங்களின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு நுழைந்து அங்கு தங்கியிருந்தனர்.அத்துடன் அவற்றுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் பொருட்களையும் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…