கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக இன்று(28.09.2022) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அமைச்சர் உள்ளிட்ட ஏனைய பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கை நவம்பர் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!