இலங்கையை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது!

தீர்மானம் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தினது உதவியும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும் கிடைப்பதற்கான வாய்ப்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒருதேசமாக காலத்திற்கு காலம் பின்பற்றிய நிலைப்பாடுகளும் தலைவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமே ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலை இலங்கையை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!