மைத்திரிக்கு எதிரான விசாரணை பத்து வாரங்களுக்கு ஒத்திவைப்பு! மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன இன்று (14.10.2022) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலேயே அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையானார்.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படது.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் கோட்டை நீதிவானுக்கு உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!