யாழ்.மாநகர முதல்வரின் அதிரடி தீர்மானம்:ஆதாரத்துடன் அறிவித்தால் சன்மானம் October 20, 2022 9:05 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை ஆதாரத்துடன் அறிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநரக எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் அல்லது காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகர சபைக்கு அறிவிப்பவர்களுக்கு குறித்த குற்றத்தை மேற்கொண்டதற்காக அறவிடப்படும் தண்டப்பணத்தில் இருந்து 10 வீத தொகையை சன்மானமாக வழங்குதாக யாழ்.மாநகர சபை தீர்மானித்துள்ளது.மாநகர சபைக் கூட்டத்தில் தீர்மானம்யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகர எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்கள்,அவர்களின் வீடுகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை தூய்மையாக பேண வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குற்றப்பணத்தில் 10 வீதம் சன்மானம்மேற்படி தூய்மையை பேணாதவர்களிடம் இருந்து குற்றப்பணம் அறவிடப்படும் என மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே குற்றமிழைப்பவர்களிடம் இருந்து அறவிடப்படும் குற்றப்பணத்தில் 10 வீதம் ஆதாரம் தருபவர்களுக்கு சன்மானமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…