யாழ். மாவட்ட செயலக பகுதியில் அமைதியின்மை

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்படும் போராட்டம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.தற்போது அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

யாழ். மாவட்ட செயலகத்திற்குள் சற்றுமுன் நுழைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் உள்நுழைந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்சவிற்கு எதிர்ப்பு இதில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொண்டுள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் ஓ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு இலட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்சவே வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!