கெபிற்றிகொல்லேவவில் பதற்றம் – வானத்தை நோக்கி சூடு, பொலிஸ் அதிகாரி பலி! November 1, 2022 6:57 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கெபிற்றிகொல்லேவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அனுராதபுரம் – கெபிற்றிகொல்லேவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அதன்பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்றுஇரவு அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார்.சம்பவத்தில் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எவ்வாறாயினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…