கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  அவரை, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சமகால அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து பயங்கரவாத தடைச் சட்டம் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!