இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

அண்மையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கைக்கான மெக்சிக்கோ தூதுவர் Federico Salas Lotfe, இலங்கைக்கான பூட்டான் தூதுவர் Rinchen Kuentsyl, இலங்கைக்கான பரகுவே தூதுவர் Flemming Raul Duarte ஆகியோர் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

மேலும் இலங்கைக்கான லக்சம்பர்க் தூதுவர் Peggy Frantzen, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan, இலங்கைக்கான ஓமான் தூதுவர் Ahmed Ali Saeed Al Rashdi  ஆகியோரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

மேலும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean- Francois Pactet மற்றும் இலங்கைக்கான கானாவின் உயர்ஸ்தானிகர் Kwaku Asomah Cheremeh ஆகியோரே இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது நற்சான்றிதழ்களைக் கையளித்தனர். 

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!