கொழும்பில் கைதான ஹிருணிக்கா உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினரை பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்றைய தினம் (15.11.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரையும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  அத்துடன் கறுவாத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!