கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை

கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து குழந்தையொன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்தே ஒன்றரை வயது குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான குழந்தையின் மாமாவால் குழந்தை மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!