வியட்நாமில் உள்ள 85 பேர் இலங்கை திரும்ப சம்மதம்!

வியட்நாம் முகாமில் உள்ளவர்களில் 85 பேர் இலங்கைக்கு வருகை தர இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவர்களை இன்னும் இருவார காலத்திற்குள் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து ,வெளிவிவாகரம் மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சிறீதரன் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!