தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்! December 2, 2022 12:25 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest வெளிநாடுகளில் உள்ளோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இந்தாண்டும் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். குடும்பத்தை விட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், அங்கிருந்து தங்களுடைய சம்பாத்தியத்தை குடும்பத்துக்கு அனுப்பி வருகின்றனர். இப்படி வெளிநாடுகளிலிருந்து தங்களுடைய தாயகத்துக்கு பணம் அனுப்புவதில், உலகளவில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் வகித்து வருவதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில், 2022ம் ஆண்டிலும், இந்தியர்களே முதலிடத்தை பிடித்துள்ளனர். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், நடப்பாண்டில் இந்தியர்கள் அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 8.1 லட்சம் கோடி ரூபாயாகும் என்பது தான். வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு பணத்தை பெற்றதில்லை.இது நடப்பாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டை விடவும் அதிகமாகும். மத்திய அரசு நடப்பு ஆண்டில், அன்னிய முதலீட்டாளர்கள் 6.48 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வர் என கணித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு, வேலைக்கு திரும்புவோர் அதிகரித்ததை அடுத்து, நடப்பாண்டில் அதிக பணம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…