யாழ். – சென்னை விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் விமானம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வேதச விமான நிலையத்துக்கு இன்று முற்பகல் வரவுள்ளது. யாழ்- சென்னை இருவழி விமான பயணச் சீட்டு 62 ஆயிரம் ரூபா முதல் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சுங்க பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, 14 பேர் கொண்ட சுங்க ஊழியர்கள் நேற்று கொழும்பில் இருந்து புறப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் (பிராந்திய சேவைகள்) டி.ஏ.எம்.ஆர். சாகர தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!