ராஜபக்சாக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது!

பிரகீத் எக்னலிகொடவிற்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சாக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது என காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
    
2022 இல் உலகின் தலைசிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியினால் தெரிவு செய்யப்பட்டமை குறித்த நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 2022 ஜனவரி 25 இல் எனது கணவர் காணாமல்போய் 12 வருடங்களாகிவிட்டன, பிரகீத்தின் தலைவிதிக்கு காரணமான ராஜபக்சாக்களிற்கு கடும் சாபத்தை வழங்குவதற்காக நான் எனது தலையை மழித்து கறுப்பு ஆடை அணிந்தேன்என அவர் தெரிவித்துள்ளார்.

அது மிகவும் கடுமையான சாபம்,ஒருநாள் எனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை எனது சாபம் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2010 ஜனவரி 25 ம் திகதி எனது கணவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்று நான் முதன் முதலில் கமரா முன்னால் தோன்றினேன் அதன் பின்னர் எனது கணவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக நான் பல தெரிவிக்கமுடியாத நெருக்கடிகளின் மத்தியில் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பிரகீத்தை என்னிடமிருந்து எடுத்து 4712 நாட்கள் ஆகிவிட்டன நீதிக்கான எனது தேடல் இன்னமும் ஓயவில்லை இந்த பயணத்தின் போது பல நல்ல இதயங்கள் எனக்கு உதவியுள்ளன சிலர் எனக்கு நீதி கிடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2010 ஜனவரி 25 ம் திகதி நான் பொலிஸ் நிலையத்திலிருந்த வேளை தற்போதைய ஜனாதிபதி என்னை தொடர்புகொண்டு நாங்கள் பிரகீத்தை கண்டுபிடிக்க உதவுவோம் கவலைப்படவேண்டாம் என்றார்,

இன்று அவர் ஜனாதிபதியாகியுள்ளார். சாட்சியங்கள் மீதான அரசியல் அழுத்தததை நீக்கியதால் அவரால் பிரகீத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏனையவர்களிற்கு நீதி கிடைப்பதற்கு ஜனாதிபதி உதவவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!