ரணிலை தவிர யாரும் அதிக அறிவும் திறனும் கொண்டவர்கள் இல்லை! ரணிலை புகழாரம் December 27, 2022 12:06 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest இன்றைய இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எவரும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதிக அறிவும் திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொடர்ந்தும் தெரிவிக்கையில், தொடக்கத்தில் கடன் மறுசீரமைப்பு வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டம் உத்தரவாதங்களைப் பெறுவது. உத்தரவாதங்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. ஆனால் கடன் மறுசீரமைப்புக்கு நேரம் எடுக்கும். இருதரப்பு கடனாளர்களிடமிருந்து உறுதிமொழிகள் வந்தால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆரம்பக் கொடுப்பனவை நாம் முடிக்க முடியும்.எனவே, இது கடனை மறுசீரமைப்பதற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும் சில படியாக இருக்கும். இன்றைய இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எவரும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதிக அறிவும் திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை. எனவே, தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கு குறைந்தபட்சம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இப்போது சிறந்த வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…