தங்களை மன்னர் என நினைத்துக் கொண்டிருந்தவர்களை துவம்சம் செய்த வருடம்!

தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்துக் கொண்டிருந்தவர்களை இல்லாமல் செய்த ஆண்டு 2022 என காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
    
2023 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி – எங்கள் வீட்டில் பால்சோறு இல்லாத 13 வருடங்கள். இந்த 13 வருடங்களில் 2022ம் ஆண்டே மிகச்சிறந்த வருடம் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்தவர்களை – தங்களை மன்னர் என நினைத்துக் கொண்டிருந்தவர்களை துவம்சம் செய்த வருடம் இது. இதன் காரணமாகவே நான் 2023ம் ஆண்டு 2022 போன்று காணப்படவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!