பேருந்துகளுக்கு தீ வைப்பதன் மூலம் ஒருவர் தலைவர் ஆக முடியாது: சரத் பொன்சேகா

பேருந்துகளை ஓட்டுவதன் மூலமோ அல்லது பேருந்துகளுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவனாக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், பேருந்துகளை ஓட்டுவது தலைவர் ஆவதற்கான தகுதி அல்ல. சஜித் பிரேமதாச, ஒரு பேருந்தை நன்கொடையாக அளித்து அதை ஓட்டுவதன் மூலம் ஓரளவு திருப்தி அடைய முடியும்.

இந்நிலையில் பேருந்துகளை ஓட்டுவதன் மூலமோ அல்லது பேருந்துகளுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவர் ஆக முடியாது. இந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!