யாழ். மாநகர சபை உறுப்பினர்களைச் சந்திக்கிறார் ஆளுநர்!

யாழ். மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வருமாறு, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
    
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காலை கட்சி ரீதியாக உறுப்பினர்களை சந்திக்கும் நோக்குடன் , ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு நேரம் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சபை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது. அதனை திருத்தங்களுடன் சபையில் சமர்ப்பிக்காது 31ஆம் திகதி நள்ளிரவுடன் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார்.

புதிய முதல்வருக்கான தெரிவு மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் பிராகாரம் நடத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் , அது தொடர்பில் ஆலோசனைகளை பெற சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்து இருந்தார். இந்நிலையிலேயே யாழ். மாநகர சபை உறுப்பினர்களை தனித்தனி கட்சி ரீதியாக சந்திப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!