ஆணைக்குழுவை மிரட்டி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி: சஜித் குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழுவை மிரட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க ரணில் அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசின் இந்த மிரட்டலுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அடிபணிந்து போகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலை நடத்தும் முழு அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றமும் சிறந்த தீர்ப்பை வழங்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தோல்விப் பயத்தாலேயே தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!