அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க இருவராலுமே நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அர்ஜூன மகேந்திரனால் ஏற்பட்ட நட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்களினால் ஏற்பட்ட நட்டத்தை இன்னும் ஈடு செய்ய முடியாவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசாது அர்ஜூன மகேந்திரன் நாட்டிற்கு வந்தால் நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பேன் என முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது அர்த்தமற்ற ஒன்றாகும். உதயங்க வீரதுங்க வந்து மிக் விமானம் மோசடி பற்றி தம் பக்க நியாயத்தை சொல்லலாம் என தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!