இழுபறியில் ஆளுநர்கள் நியமனம்: ரணில் மீது அதிருப்தியில் மொட்டு கட்சி..! January 9, 2023 9:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் மேலும் தாமதமாகின்றன. இதனால் மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அறியமுடிகின்றது.மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமன விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சில மாதங்களுக்கு முன் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொட்டுக் கட்சி சார்பில் ஐந்து ஆளுநர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான்கு ஆளுநர்களும் நியமித்தல் என்பதே அந்த இணக்கப்பாடு என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜனாதிபதி எவ்வித காரணமுமின்றி அந்த நியமனங்களை இழுத்தடிக்கின்றார் என்று மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்கனவே, அமைச்சரவை நியமனம் கூட அப்படியே கிடக்கின்றது. இதனால் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள் என்று அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…