தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கவே புதுப் புதுக் கூட்டுக்கள்: டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (13.01.2023) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல.

இந்நிலையில் வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும்.
அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகின்றது. அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்கின்றன” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!