யாழ். மாநகர முதல்வர் நியமனம் என் அதிகாரத்துக்குட்பட்ட விடயம் அல்ல!

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

கடந்த 19ஆம் திகதி யாழ். மாநகர முதல்வர் தெரிவு இடம்பெற இருந்த நிலையில் சபையில் கோரம் இருந்ததாக ஒரு பகுதியினரும் கோரம் இல்லை என பிறிதொரு பகுதியினரும் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் ஊடகங்களில் அவதானித்தேன்.

மாநகர சபையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை. மாறாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும் உள்ளூராட்சி ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் என்னிடம் உள்ளது.

ஆகவே இலங்கை அரசியல் அமைப்பு மற்றும் மாநகர கட்டளைச் சட்டங்களுக்கு உட்பட்டு முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!