புதிய மேயர் நியமனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

முறையற்ற விதத்தில் யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று விடயங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!