யாழ். மாவட்டத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு



யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இதுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் வேலைகள் இடம்பெற்று வருகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (27.01.2023) 3 தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!