மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!

சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போதே நீதவான் முன்னாள் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளை முன்னாள் ஜனாதிபதி சாட்சிக்கூண்டிற்குள் செல்லாமல் வெளியில் நின்றிருந்தார். அதனை தொடர்ந்தே நீதவான் இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!