13ஆவது திருத்தம் முழுமை பெற ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்: விமல் சபதம்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று (02.01.2023) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய 13ஐ முழுமையாக நடைமுறையாக்க இடமளிக்கமாட்டோம். அதனை தோற்கடிக்க எல்லா வழிகளிலும் போராடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தையும் விமல் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!