சுதந்திர தினத்துக்கு ஜோ பைடன் வாழ்த்து!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
    
இருதரப்பு நட்பை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அவர் எதிர்பார்க்கின்றார். மேலும், இரு நாட்டு மக்களுக்கும் அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான தொலைநோக்குப் பார்வையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை பைடன் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!