தேர்தலில் களமிறங்கப்போவதாக ஆதிவாசிகளின் தலைவர் அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தம்பனை ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னியலேஅத்தே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (07.02.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் அதிகாரப் பரவலாக்கல் முறையை இல்லாதொழிப்பதற்கு தமது கட்சியை முன்னுதாரணமாக்கி அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!