சூரியவெவ மைதானத்தின் பக்கம் திரும்பும் இந்தியாவின் கவனம்

அம்பாந்தோட்டை- சூரியவெவவில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச துடுப்பாட்ட மைதானத்தை, இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தனியார் அரசபங்குடைமையாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சூரியவெவ துடுப்பாட்ட மைதானம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது,

இந்த நிலையிலேயே தற்போது இதனை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, கதிர்காமம், வெள்ளவாய, அம்பாந்தோட்டை பகுதிகளில் விடுதிகளும் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!