இலங்கையில் முதலாவது பறவைகள் சரணாலயம்

இலங்கையில் முதலாவது சர்வதேச தரத்திலான பறவைகள் சரணாலயம் திறக்கப்படவுள்ளது. கண்டி – ஹந்தானையில் திறக்கப்படவுள்ள இந்தச் சரணாலயம் எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்படுகின்றது. இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ள சரணாலயங்களைப் போன்று இந்தச் சரணாலயம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் நாள் முழுவதும் சரணாலயத்திற்குள் தங்கியிருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்தச் சரணாலயத்தில் அமையவுள்ளன. ஆரம்பத்தில் 100 பறவைகளைக் கொண்டதாக இந்தச் சரணாலயம் அமையவுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!