தேர்தலுக்கு நிதி வழங்க மறுத்ததற்கு எதிராக வழக்குத் தாக்கல்!

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    
குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி நிதியமைச்சின் செயலாளர் உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின்ன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!