அரச மருத்துவ அதிகாரிகளை சீண்டிப்பார்க்க வேண்டாம்!- அரசுக்கு எச்சரிக்கை.

வரி அறவீடு மற்றும் வேதன குறைப்பை மேற்கொண்டு அரச மருத்துவ அதிகாரிகளை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வாசன் ரட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்து முறையாக செயற்படாதபட்சத்தில் பாரிய போராட்டத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வைத்தியர் வாசன் ரட்னசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!