கோட்டாபயவிற்கு எதிரான வெள்ளை வான் கடத்தல் வழக்கு: பொய்யான சாட்சியம் வழங்கியதாக சாட்சி தெரிவிப்பு-

சர்ச்சைக்குரிய வெள்ளைவான் வழக்கின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவர் தாம் வழங்கிய இரகசிய வாக்குமூலம் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வெள்ளைவான் வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கின் இரண்டாவது சாட்சியான அதுல சஞ்சீவ மதநாயக்க, தாம் பொய் சாட்சியம் வழங்கியமையை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!